சின்னமனூரில் தரக்குறைவாக பேசியதால் பெண் தற்கொலை
- வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் முருகேஸ்வரியை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.
- மனவேதனையில் இருந்தவர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனி 5-வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி முருகேஸ்வரி (வயது 38). இவர் சீப்பாலக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மகன் சந்துரு (19) கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருநங்கையாக மாறி விட்டார். இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பாண்டி, அவரது மனைவி ஆகியோர் முருகேஸ்வரியை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.
இது குறித்து கோவையில் இருந்த தனது மகனிடம் முருகேஸ்வரி கூறி அழுதார். அவர் சமாதானப்படுத்திய நிலையில் மனவேதனை யில் இருந்த முருகேஸ்வரி தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்துரு சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தாயை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.