உள்ளூர் செய்திகள்
- சகோதரர்களிடையே நில தகராறில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
- மன வேதனை அடைந்த கமலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள யு.புரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி கமலா (வயது26). இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிய நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவரது கணவர் மற்றும் அவரது சகோதரர்களிடையே நில தகராறில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மன வேதனை அடைந்த கமலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.