உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2023-08-27 15:14 IST   |   Update On 2023-08-27 15:14:00 IST
  • ஷில்பாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
  • தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

கிருஷ்ணகிரி,   

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பத்தேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகள் ஷில்பா (வயது23). இவர் மோகன்ராஜ் என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்க–ளுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வந்தனர். ஷில்பாவு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேன்கனிக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஷில்பா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவி–னர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்–சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்–கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 3 வருடங்கள் ஆனநிலையில் ஷில்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, பெண்ணின் கணவர் மற்–றும் உறவினர்களி டம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News