உள்ளூர் செய்திகள்

பெண் விஷம் அருந்தி தற்கொலை

Published On 2022-12-23 10:35 GMT   |   Update On 2022-12-23 10:35 GMT
  • பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அக்ரகாரத் தெருவில் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
  • உடல்நிலை சரியாகாததால், விரக்தி யில் இருந்த விஜயலட்சுமி, கடந்த 20-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அக்ரகாரத் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). இவரது மனைவி விஜயலட்சுமி (38). இவர்கள் வெற்றிலை கொடிகாலுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் விஜயலட்சுமிக்கு கடந்த 3 வருடங்களாக உடல்நிலை பாதித்து இருந்தது. இதன் காரணமாக பல்வேறு மருத்து வமனைகளுக்கு சென்று விஜயலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல்நிலை சரியாகாததால், விரக்தி யில் இருந்த விஜயலட்சுமி, கடந்த 20-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த கணவரிடம் விஷம் அருந்தியதை கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக விஜயலட்சுமியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News