உள்ளூர் செய்திகள்

பாண்டமங்கலம் அருகே தீயில் கருகிய பெண் சாவு

Published On 2023-03-04 15:06 IST   |   Update On 2023-03-04 15:06:00 IST
  • நல்லம்மாள் (வயது 65). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தங்காயி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சுவாமிக்கு விளக்கு வைத்துள்ளார்.
  • அப்போது நல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் பட்டு தீ மளமளவென எரிய ஆரம்பித்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தங்காயி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சுவாமிக்கு விளக்கு வைத்துள்ளார் . பின்னர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த விளக்கு எரிந்து கொண்டிருந்தது . அப்போது நல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் பட்டு தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து சேலையில் பிடித்த தீயை அனைத்தனர். இருப்பினும் சேலையில் தீப்பிடித்து எரிந்ததில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இன்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News