உள்ளூர் செய்திகள்

காரைக்கால் நகைக்கடையில் திருடிய பெண் கைது: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2023-07-26 07:48 GMT   |   Update On 2023-07-26 07:48 GMT
  • மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம்.
  • நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

புதுச்சேரி:

காரைக்கால் புதுத்துறையை சேர்ந்தவர் சித்ரா. இவர், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடை உரிமையாளர் மற்றும் இவரது மகன் ஆகியோர் மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி நகைகளை சரிபார்த்து விட்டு நேற்று முன்தினமும் சரி பார்த்தனர். அப்போது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது.

மோதிரம் குறைவதால் கடையில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அப்போது, கடையில் இருந்த சித்ராவிடம், 45 வயது மதிக்கத்தக்க நபரும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற நபர்களை தேடி வந்த நிலையில் மோதிரத்தை திருடிசென்ற திருவாரூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 45) நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவருடன் வந்த குபேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News