உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை பாராட்டிய காட்சி.

மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி: சேலம் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

Published On 2022-08-13 09:05 GMT   |   Update On 2022-08-13 09:05 GMT
  • மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.
  • வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

சேலம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 2-வது இடமும், ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 3-வது இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

இதற்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற சேலம் மாவட்ட அணியில் இடம்பிடித்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு வழங்கினார்.

இதில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், இணை செயலாளர்கள் சீனிவாசன், வடிவேல், வேங்கையன், நிர்வாகி நந்தன், தொழில் அதிபர் விஜயராஜ், பயிற்சியாளர் அருள் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News