உள்ளூர் செய்திகள்

இடிந்துவிழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்.

புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்படுமா?

Published On 2023-02-10 07:46 GMT   |   Update On 2023-02-10 07:46 GMT
  • இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
  • கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் ஊராட்சியில்துளசிபுரம் ஊராட்சிஉள்ள கிராம நிர்வாக அலுவலககட்டிடம் கடந்த 2004 கட்டபட்டது.

தற்போது இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் வாங்க வந்து செல்கின்றனர்.

மோசமான நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News