உள்ளூர் செய்திகள்

ஊட்டி, கூடலூர் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்.

Published On 2022-11-18 14:33 IST   |   Update On 2022-11-18 14:33:00 IST
  • 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது.
  • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில மாதங்களாக உலவி வருகிறது. இந்நிலையில் கூடலூர் உதகை நெடுஞ்சாலையில் மேல் கூடலூர் பகுதியில் 2 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. சில மணி நேரங்களுக்குப் பிறகு யானைகள் தானாகவே சாலையை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் சென்றன. இதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அருகில் சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News