கோப்பு படம்
தொழிலாளி கொலையில் திருப்பம் மதுபோதையில் ரகளை செய்ததால் அடித்து கொன்றோம் மனைவி-மகன் வாக்குமூலம்
- போதையில் ரகளை செய்ததால் தந்தையை கொலை செய்ததாக மகன் மற்றும் தாய் வாக்குமூலம் அளித்தனர்.
- போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி(55). கூலித்தொழிலாளியான இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், காளிதாஸ் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு விடுமுறை க்காக சொந்த ஊருக்கு வந்தார். முனியாண்டிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சிைன ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வீட்டின்முன்பு தலையில் பலத்த காயங்களுடன் முனியாண்டி இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கொன்றுவிட்டதாக காளிதாஸ் மற்றும் முருகே ஸ்வரி கண்டமனூர் போலீ சில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை யில் முனியாண்டிக்கு கொலை செய்யும் அளவுக்கு எதிரிகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாய் மற்றும் மகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்ட னர். அதில் முனியாண்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைதொடர்ந்து போலீ சார் அவர்களை கைது செய்தனர்.
முனியாண்டி மது பழக்கத்திற்கு அடிமையான தால் அடிக்கடி வீட்டில் பிரச்சினை செய்து வந்து ள்ளார். நேற்று குடிபோதை யில் வந்த அவர் முருகே ஸ்வரி மற்றும் காளிதாசுடன் தகராறு செய்தார். மேலும் அவர்களை தாக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் அவரை தள்ளிவிட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதன்பின்னர் முனியாண்டி யின் உடலை வீட்டின்முன்பு போட்டுவிட்டு அவர் இறந்துவிட்டதாக நாடக மாடியுள்ளனர்.
போலீசார் விசாரணை யில் அவர்கள் மாட்டி க்கொண்டனர். தாங்கள் எவ்வாறு கொலை செய்ேதாம் என போலீசில் தாய், மகன் வாக்குமூலம் அளித்துள்ளனர்.