உள்ளூர் செய்திகள்

நெல்லையில் அணை பகுதிகளில் பரவலாக மழை

Published On 2022-10-23 08:16 GMT   |   Update On 2022-10-23 08:16 GMT
  • மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
  • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 53 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

அணைக்கு வினாடிக்கு 134 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 70.85 அடி நீர் இருப்பு உள்ளது.

இதேபோல் பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீடடரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 84.05 அடி நீர்இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 463.89 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 404.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News