உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2023-10-29 07:40 GMT   |   Update On 2023-10-29 07:40 GMT
  • மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

கடலூர்:

இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 29, 30 ஆகிய நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 31 மற்றும் நவ.1-ந் தேதிகளில் சில இடங்களிலும், நவ. 2, 3-ந் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, புவனகிரி, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், தொழுதூர், வானமாதேவி, புவனகிரி, அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்ந்தது. கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த திடீர் மழை காரணமாக ஆங்காங்கே வேளாண்மை பணிகள் பாதிப்படைந்தது. மேலும் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வனமாதேவி - 14,தொழுதூர் - 8, சிதம்பரம் -7.9,பரங்கிப்பேட்டை -5.4 , அண்ணாமலை நகர் -5,புவனகிரி - 3,பண்ருட்டி -2,லால்பேட்டை -2,கடலூர் கலெக்டர் அலுவலகம் - 0.4 என மொத்தம் 47.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News