உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2022-10-08 08:10 GMT   |   Update On 2022-10-08 08:10 GMT
  • கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது.
  • செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கடலூர்:

தெற்கு ஆந்திரா பகுதியில் மேல்வளி மண்டல சுழற்றி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை நீடித்தது.

கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, திருவந்திபுரம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை கொட்டியது.  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழையையொட்டி நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மழை விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஊடு பயிராக பயிரிட்டுள்ள செடிகளுக்கு இந்த மழை உகந்ததாக இல்லை என்றும், இதனால் செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை பற்றி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகா ரிகள் தீவிரமடைந்துள்ளனர்

Tags:    

Similar News