கடையம் அருகே தொழிலாளியை கொலை செய்தது ஏன்?-கைதான ரவுடி வாக்குமூலம்
- எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தினேன்.
- கைதான ராஜரத்தினம் பெயர் கடையம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பாதுகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
குத்திக்கொலை
இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் கீழபத்து வயல் பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்த ராஜரத்தினம் (38 ) என்பவர் சக்திவேல் முருகனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுதொடர்பாக கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர் விசாரணை நடத்தி ராஜரத்தினத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-
அவதூறு பேச்சு
தினமும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம்போல் நேற்றும் மது அருந்தினோம். அப்போது சக்திவேல் முருகன் மனைவியை நான் அவதூறாக பேசினேன்.
உடனே அவர், எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்தேன்.