உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

உத்தமபாளையம் அருகே முல்லைபெரியாற்றில் குளிக்கச்சென்றவர் பலி

Published On 2023-09-16 11:16 IST   |   Update On 2023-09-16 11:16:00 IST
  • நேற்று காலை குளிக்கச்சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
  • வடக்கு கரையோரம் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினார்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பக்ருதீன்(44). டெய்லராக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக முல்லைபெரியாற்றில் குளித்து வந்தார். அதன்படி நேற்று காலை அங்கு குளிக்கச்சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

வடக்கு கரையோரம் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் பக்ருதீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News