உள்ளூர் செய்திகள்

பல் பிடுங்கிய விவகாரம்: வாலிபர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனைகள் என்ன?- விளக்கம் கேட்டு மனு

Published On 2023-04-14 11:00 GMT   |   Update On 2023-04-14 11:00 GMT
  • ராஜேஸ்வரி மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ள ஆவணம் வெளியாகி உள்ளது.
  • கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும்

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 10-ந் தேதி வி.கே.புரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 22) என்பவரும், 17 வயதான அவரது தம்பியும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களது பற்கள் உடைக்கப்பட்டதாக அவர்களின் தாயார் புகார் கூறியிருந்தார்.

நேற்று அருண்குமார் பல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவரது தாயார் ராஜேஸ்வரி மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ள ஆவணம் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான உரிய விளக்கம் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை என்று அவரது தாயார் புகார் கூறி உள்ளார்.

அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் 1-ன் படி ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களில், கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 6-ந் தேதி கேட்ட நிலையில் 48 மணி நேரத்தை கடந்தும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை பொது தகவல் அதிகாரி எனது மகனின் மருத்துவ அறிக்கை குறித்து பதில் தர மறுக்கிறார் என அவர் புகார் கூறி உள்ளார்.

அந்த மனுவில் கடந்த 10 -ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் முன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை ராஜேஸ்வரி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News