உள்ளூர் செய்திகள்

ஏரியில் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் பலி

Published On 2022-09-29 07:43 GMT   |   Update On 2022-09-29 07:43 GMT
  • கருமந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.
  • மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கரு மந்துறை யில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த வேடன் மகன் பிரவீன்(வயது 18) விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் 5 மாணவர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News