உள்ளூர் செய்திகள்

பலியான ராஜேந்திரன்

ஆத்தூர் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலி

Published On 2022-08-29 09:58 GMT   |   Update On 2022-08-29 09:58 GMT
  • ராஜேந்திரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
  • தணணீரில் இறங்கிய அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர் தனியார் நிறுவனத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அருகிலுள்ள துலுக்கனூர் ஏரிக்கு நண்பர்களுடன் சென்றார்.

நண்பர்கள் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். அப்போது ராஜேந்திரனும் மீன்பிடிக்க வருவதாக கூறி ஏரியின் உள்ளே இறங்கினார். ராஜேந்திரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தணணீரில் இறங்கிய அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.

உடனடியாக நண்பர்கள் கரைக்கு அழைத்து வந்து அவருக்கான முதல் உதவிகளை அளித்தனர். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

இது குறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News