உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாகையில் நடந்தது.
- பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் 70 வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியல் கல்லூரி கூட்டரங்கில் நடைப்பெற்றது.
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலமையில் நடைப்பெற்ற விழாவில் கூட்டுறவு வார உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல், கீழையூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2870 பயணாளி களுக்கு 12 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.