உள்ளூர் செய்திகள்

சொத்துவரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கபடும்

Published On 2022-08-29 08:52 GMT   |   Update On 2022-08-29 08:52 GMT
  • செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள பாக்கி தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
  • குடிநீர் இைணப்பு துண்டிக்கப்படும்.

புன்செய்ப்புளியம்பட்டி:

புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-

புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, கடை வாடகை, ஆண்டு குத்தகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.

தவறும் பட்சத்தில் முன்அறிவிப்பு இன்றி தங்களுடையை குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News