உள்ளூர் செய்திகள்
தென்னை நடவு செய்ய விரும்பும்வி வசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
- தாலுகா பரமத்தி வட்டாரத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தினால் தென்னை பரப்பு அதிகரிக்கும்.
- உதவி இயக்குநர் அலுவலகத்திலோ விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தினால் தென்னை பரப்பு அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக தென்னை நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள பரமத்தி வட்டார விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடமோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ விண்ணப்பங்களை கொடுக்கலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.