உள்ளூர் செய்திகள்

சான்றிதழுடன் வெற்றி பெற்ற வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள்.

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-09-28 09:18 GMT   |   Update On 2022-09-28 09:18 GMT
  • சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
  • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திசையன்விளை:

சி.பா. ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் யுவராஜ்குருரூபவ், பிரதிவ் வாசன்ரூபவ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். யுவராஜ் குருரூபவ் முதலிடத்தையும், பிரதிவ் வாசன்ரூபவ் 2-ம் இடத்தையும், அஸ்வின் 3-ம் இடத்தையும் வென்று சாதனை படைத்தனர்.

முதல் 3 இடத்தை பெற்று சாதனை படைத்த மாணவர்களை வி.எஸ்.ஆர். பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பாராட்டி பரிகளை வழங்கினார்.

Tags:    

Similar News