உள்ளூர் செய்திகள்
- சத்யா வித்யாலயா பள்ளியில் நண்பர்கள்தின விழா நடந்தது.
- பாலர்வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் நண்பர்கள் தினவிழா பாலர்வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது.
சேர்மன் குமரேசன், டாக்டர் சித்ரா குமரேசன், முதன்மை செயல் அலுவலர் அரவிந்த் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்தரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர்.
பாலர்வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொண்டனர். இதை வெளிப்படுத்தும் வகையில் இனிப்பு வழங்கி, ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.