உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2022-09-13 13:22 IST   |   Update On 2022-09-13 13:22:00 IST
  • ராஜபாளையத்தில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • இதில் படுகாயமடைந்த அழகுராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜரத்தினம், சிவா, சுந்தர். இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று சித்தன்கோவில் முன்புள்ள நகராட்சிக்கு சொந்தமான தெருக்குழாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனை பேட்டைக்கடை தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நேற்று இரவு அங்குள்ள தனியார் மதுபான பார் அருகில் விஜயகுமாரை 3 பேரும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்.

ராஜபாளையம் துரை ச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (48) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இருவரும் மது குடித்தனர். அப்போது செல்வராஜ் மதுபாட்டிலால் அழகுராஜாவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அழகுராஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து அவரது தாயார் ராக்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News