உள்ளூர் செய்திகள்

வாலிபர்- தொழிலாளி தற்கொலை

Published On 2022-07-10 14:21 IST   |   Update On 2022-07-10 14:21:00 IST
  • வாலிபர்- தொழிலாளி தற்கொலை செய்துள்ளனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விருதுநகர்

சிவகாசி, சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் முத்துகுமார் (வயது 19). இவர் 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் தனது பெற்றோர்களிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இப்போது பணம் இல்லை. பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் தனியாக இருந்த முத்துகுமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 42). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவரது இளைய மகன் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மகனை கண்டித்தும் அவன் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சுந்தரமூர்த்தியன் மனைவி சீனியம்மாள், பூமாபட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News