உள்ளூர் செய்திகள்
- இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி பாண்டிசெல்வி(28). சம்பவத்தன்று இவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு காரியாபட்டி அருகே உள்ள செவல்பட்டியில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது உறவினர்கள் சமரசம் செய்தனர். இந்த நிலையில் மற்றொரு உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பாண்டிசெல்வி அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.