உள்ளூர் செய்திகள்

திருத்தங்கல், சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணிகள்

Published On 2023-03-11 08:41 GMT   |   Update On 2023-03-11 08:41 GMT
  • திருத்தங்கல், சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
  • ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

விருதுநகர்

மதுரையில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியதாவது:-

விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதையில் திருத்தங்கல் மற்றும் சாட்சியாபுரத்தில் ெரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதுகுறித்து ெரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில நெடுஞ்சாலை துறையின் மதிப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவ தாகவும் அது முடிந்த பின் விரைவுபடுத்தப்படும் என்றும் ெரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. சிலம்பு எக்ஸ்பிரஸ் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்ற வேண்டும் என்று கேட்டதற்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு காரைக்குடி, மானாமதுரை வழியாக வாரம் 3 முறை மற்றொரு ெரயில் இயக்கப்பட உள்ளதாகவும், ெரயில் தினசரி ெரயிலாக இயக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் வாய்ப்பில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.

நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூர் மற்றும் திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்லவும், கொல்லம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்லவும் நடவடிக்கை கோரியதற்கு சிவகாசியில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும், நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தினசரி ரெயில் செங்கோட்டை-சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு புதிய ெரயில், ஐதராபாத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ெரயில் வசதி, குருவாயூர்-புனலூர் ெரயில் மதுரை வரை நீட்டிப்பு, புதுச்சேரி- கன்னியாகுமரி பயணிகள் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான கூடுதல் ெரயில் வசதி தொடர்பான கோரிக்கை களுக்கு ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News