சொக்கர் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
- ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து ‘அ’ என்ற எழுத்தை அரிசியில் எழுத செய்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோவில் என்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சரஸ்வதி தேவி முன்பு அட்சராப்யாசம் என்ற ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா பரம்பரை அறங்காவலராக பொறுப்பு வகிக்கும் இந்த கோவிலில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து 'அ' என்ற எழுத்தை அரிசியில் எழுத செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் பெற்றோருடன் சரஸ்வதி தேவி முன்பு வழிபாடு செய்தனர். அவர்களுக்கு சொக்கர் கோவில் சார்பில் சிலேடு, குச்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் பரம்பரை அறங்காவலரும், ராம்கோ குரூப் சேர்மனுமான பி.ஆர். வெங்கட்ராமராஜா வழிகாட்டுதலின்படி சொக்கர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.