உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டு

Published On 2023-04-14 14:25 IST   |   Update On 2023-04-14 14:25:00 IST
  • அதிகாரிகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.
  • கொள்முதல் நிலையம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ராஜபாளையம்

ராஜபாளையம் தொகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுத்துத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன், மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர்கள், தலையாரிகள் என அனைவரையும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அவர்களுக்கு ராஜபாளையம் தொகுதி விவசாயிகள் சார்பிலும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News