உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை

Published On 2022-10-07 08:01 GMT   |   Update On 2022-10-07 08:01 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • குழந்தை இல்லாததால் கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (50). இவரது கணவர் பாலசுப்பிரமணியன். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகளான செல்லகனிக்கு சாத்தூர் சுப்பிரெட்டியபட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் சென்னையில் மளிகை கடை நடத்தி வந்தனர்.

குழந்தை இல்லாததால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முனீஸ்வரன், வத்திராயிருப்பில் உள்ள மாமனார் வீட்டில் செல்லக்கனியை விட்டுச் சென்றார்.

இந்த நிலையில் சாத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முனீஸ்வரன் மனுதாக்கல் செய்தார். இதை அறிந்த செல்லக்கனி நேற்று காலை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லக்கனி இறந்தார். இதுகுறித்து செல்லகனியின் தாய் அமுதா கொடுத்த பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News