உள்ளூர் செய்திகள்

மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு பொதுமக்கள் நன்றி

Published On 2023-06-30 07:00 GMT   |   Update On 2023-06-30 07:00 GMT
  • சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் சிவகாசியில் நின்று செல்ல போராடிய அனைவருக்கும் மாணிக்கம் தாகூர் எம்.பி. நன்றி தெரிவித்தார்.
  • சிவகாசி மக்களுக்கும், மதுரை எம்.பி. வெங்கடேசன், வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்.16101 சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என்று 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரெயில்வே மந்திரியிடம் கடிதம் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் கொடுத்தார்.

அதன் பின் கடந்த செப்டம்பர் 2022-ல் மதுரை எம்.பி. ரெயில் மறியல் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து தென்னக ரெயில்வே ஆேலாசனை கூட்டத்திலும் வைகோவுடன் இணைந்து வலியுறுத்தினார்.

இந்நிலையில் தற்போது சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்லும் ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தன்னுடன் போராடிய சிவகாசி மக்களுக்கும், மதுரை எம்.பி. வெங்கடேசன், வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய ரெயில்வே மந்திரிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதிவிட்டுதான் இதற்கு ஏற்பாடு செய்ததாக கூறுவது ஏற்புடையதல்ல என்றும் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

Tags:    

Similar News