உள்ளூர் செய்திகள்

ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி பங்கேற்றார்.

வேளாண் விளைபொருட்கள் கிட்டங்கியை தரமானதாக கட்டி முடிக்க உத்தரவு

Published On 2022-11-23 08:18 GMT   |   Update On 2022-11-23 08:18 GMT
  • வேளாண் விளைபொருட்கள் கிட்டங்கியை தரமானதாக கட்டி முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
  • விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் நடந்தது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப் பணிகளின் ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

இந்த திட்டத்தின் மூலம் வேளாண் பொறியியல் துறையினரால் கட்டப்படும் தடுப்பணைகள்நல்ல நிலையிலும், தரமானதாகவும், விவசாயிகளுக்கு பயன்தரக்கூடிய வகையி லும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களை தேர்வு செய்து கட்டப்பட வேண்டும்.

கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு மற்றும் அருகில் உள்ள கிணறுகளின் நீர்மட்ட அளவு மேலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயன்களை நேரில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண்மை துறையினரால் இந்த திட்டத்தின் மூலம் ராஜபாளையம் வடக்கு தேவதானத்தில் கட்டப்பட இருக்கும் வேளாண் விளை பொருட்களின் கிட்டங்கி கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி, தரமானதாக கட்டி முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்டராமன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கோவில் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News