உள்ளூர் செய்திகள்

விழாவில் ஒரு மாணவிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

புதிய கட்டிட திறப்பு விழா

Published On 2022-06-28 09:35 GMT   |   Update On 2022-06-28 09:35 GMT
  • புதிய கட்டிட திறப்பு விழா தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
  • விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் தொகுதியில் உள்ள ரிதம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளிக்கு ஜப்பான் நாட்டு தூதர் டாகா மயசுகி நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக தனுஷ்குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்று த்திறன் உள்ளது. அதனைக் கண்டறிவது, வாழ்வில் முன்னேற்றமடைய செய்வது ஆசிரியர்களின் கடமை ஆகும. அதுபோல் இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளிக்கும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் தி.மு.க.வும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் உறுதுணையாக இருப்பதாக கூறினார்.

விழாவில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்ப கராஜ், மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News