உள்ளூர் செய்திகள்

வெள்ளி பொருட்களை விட்டு சென்ற மர்மநபர்கள்

Published On 2023-06-18 08:58 GMT   |   Update On 2023-06-18 08:58 GMT
  • திருடச்சென்ற வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் விட்டு சென்றனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் சூலக்கரை மேடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன்(வயது57). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஊருக்கு வரும் மகனை அழைத்து வருவதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முருகன் குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். இவர்கள் வருவதை கண்ட மர்மநபர்கள் பின்கதவு வழியாக தப்பி சென்றனர்.

அப்போது அவர்கள் பை ஒன்றை விட்டு சென்றனர். அதில் வெள்ளியிலான விநாயகர் சிலை, கரண்டிகள், கிண்ணங்கள், காமாட்சி விளக்கு, தட்டுகள், உடைந்த தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவைகளை சூலக்கரை போலீஸ் நிலையத்தில் முருகன் ஒப்படைத்தார். மேலும் தனது வீட்டில் மர்மநபர்கள் திருட முயற்சி செய்தது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News