உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் மே தின விழா பேரணி

Published On 2023-05-03 08:35 GMT   |   Update On 2023-05-03 08:35 GMT
  • ராஜபாளையத்தில் மே தின விழா பேரணி நடந்தது.
  • ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்தது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா பேரணி கொட்டும் மழையில் நடந்தது. ஜவகர் மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி காந்தி கலைமன்றம், மதுரை சாலை, காந்திசிலை ரவுண்டானா வழியாக பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ரவி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் லிங்கம், நகரச் செயலாளர் விஜயன் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, சோமசுந்தரம், சுப்பிரமணியம், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News