உள்ளூர் செய்திகள் (District)

பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் உறவி–னர்களை தளவாய்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெடிவிபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்தினருக்கு காங். தொழிலாளர் யூனியன் ஆறுதல்

Published On 2023-10-20 06:28 GMT   |   Update On 2023-10-20 06:28 GMT
  • வெடிவிபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்தினருக்கு காங். தொழிலாளர் யூனியன் ஆறுதல் கூறினார்.
  • வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண் டார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த கிச்ச னாயக்கம்பட்டி அருகிலும், ஸ்ரீவில்லிபுத் தூரை அடுத்த எம்.புதுப்பட்டி அருகே ரெங்கபாளையத்திலும் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 12 பெண்கள் உள்பட 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குறிப்பாக லட்சுமியாபு ரம், அழகாபுரி, காந்திநகர், மூவறைவென்றான் பகுதி களை சேர்ந்தவர்கள் பலி யாகினர். இந்த தொழிலா ளர்களின் குடும்ப உறுப்பி னர்களை ராஜபாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் விருது நகர் மாவட்ட தலைவ ரும், பட்டாசு மற்றும் தீப் பெட்டி நலவாரிய உறுப்பி னருமான தளவாய் பாண்டி யன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்க ளுக்கு கிடைக்க வேண்டிய அரசு நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டி அழகாபு ரியில் முகாமிட்டிருந்த சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், வத்திராயி ருப்பு வட்டாட்சியர் முத்து மாரி ஆகியோரை நேரில் சந்தித்து உயிரிழந்த தொழி லாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,

பெற்றோர்களை இழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி கேட்டுக்கொண் டார்.

அப்போது வத்திராயி ருப்பு முன்னாள் வட்டாரத் தலைவர் அண்ணாதுரை, விருதுநகர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ராமர், மாவட்ட துணைத் தலைவர் பாண்டிசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News