உள்ளூர் செய்திகள்

அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டிருப்பது தவறான நடைமுறை

Published On 2023-02-16 09:30 GMT   |   Update On 2023-02-16 09:30 GMT
  • ஈரோடு இடைத்தேர்தல் அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டிருப்பது தவறான நடைமுறை என்று மாநில செயலாளர் கூறினார்.
  • அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.

விருதுநகர்

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன் இன்று நிருபர்க ளிடம் கூறியதாவது:-

மத்தியில் அதானி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அதானியை அழைத்து செல்கிறார். மோடி அரசு அதானிக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. பாராளு மன்றத்தில் மோடி அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நடைமுறையை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான். இதை தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் பெண்கள் காப்பகத்தில் விதிமுறைகள் மீறப்படுகின்றன. மேலும் அங்கு பாலியல் தொல்லை களும் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காப்பகங்களை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார்.

நிலக்கரி ஆலைகளால் கடுமையாக மாசு ஏற்படுகி றது. ஆனால் அதைபற்றி எதுவும் சொல்லாமல் பட்டாசு ஆலைகளை குறைகூறுவது தவறான நடைமுறை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன், சி.ஐ.டி.யூ. செயலாளர் தேவா ஆகி யோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News