உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கான குடிநீர் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அருகில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளார்.

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைப்பு

Published On 2023-05-28 08:24 GMT   |   Update On 2023-05-28 08:24 GMT
  • தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
  • மணிகண்டராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கானதாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டப்பணியின் தொடக்க விழா சங்கரன்கோவிலில் நடந்தது.

இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா, மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தலைமை பொறியாளர் ரகுபதி, தனுஷ்குமார் எம்.பி.,

தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத்திட்ட தொடக்க விழா மற்றும் ராஜபாளையம் ஒன்றிய கிராமப்பகுதிகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்றனர்.

இதில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News