உள்ளூர் செய்திகள்

அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பொறுப்பு சேர்மனாக பொறுப்பேற்று கொண்ட போது எடுத்த படம்.

பொறுப்பு சேர்மன் பதவியேற்பு

Published On 2023-08-05 07:05 GMT   |   Update On 2023-08-05 07:05 GMT
  • நரிக்குடி ஒன்றியத்திற்கு பொறுப்பு சேர்மன் பதவியேற்றார்.
  • கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்ப ட்டது. அதனை ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்கையை பரிசீலனை செய்த ஊரக தழிலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து சேர்மன் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் இல்லாததால் பல மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய நிர்வாக நலன் கருதி துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை சேர்மனாக (பொறுப்பு) செயல்பட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மனாக அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், வாசுகி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் அம்மன்பட்டி, அரசு அலுவலர்கள்,கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நரிக்குடி ஒன்றிய புதிய சேர்மனான அம்மன்பட்டி ரவிச்சந்திரனுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

அம்மன்பட்டி மற்றும் உடைய சேர்வைக் கார் பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொறுப்பு சேர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News