உள்ளூர் செய்திகள்
- காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் ரவீந்திரநாத் (57). இவர் வட்டார கல்வி அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். அதன் பின்னர் உடல்நிலை பாதிப்பால் ெதாடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து ரவீந்திர நாத்தின் மனைவி விமலா கொடுத்த புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.