உள்ளூர் செய்திகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஊழியரிடம் தங்க நகை பறிப்பு

Published On 2023-11-19 07:59 GMT   |   Update On 2023-11-19 07:59 GMT
  • பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஊழியரிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.
  • கைவரிசை காட்டிய ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்,

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 40). இவர் ஆமத்தூரை அடுத்த வடமலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அவர் தனது வீட் டில் இருந்து இருசக்கர வாக னத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று அதே போல் பள்ளிக்கு சென்ற அவர், மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார். முன்னதாக விருது நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் அவர் முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் வந்த போது, சிவகாசி சாலையில் குமாரலிங்காபுரம் பகுதியில் அவரை பின்தொடர்ந்து மற்ெறாரு மோட்டார் சைக் கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி கள் 2 பேர் திடீரென்று ராஜலட் சுமி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.

இருந்தபோதிலும் அவர்க ளிடம் கடுமையாக போரா டியும் பலனின்றி போனது. இதில் 5 பவுன் செயினில் ஒன்றரை பவுன் நகையுடன் அந்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து ராஜலட்சுமி ஆமத் தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடு பட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News