உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

Published On 2023-02-02 06:41 GMT   |   Update On 2023-02-02 06:41 GMT
  • விருதுநகரில் மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
  • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி.எம்.டி.எஸ்., ஹவில்தார் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.

தேர்வு குறித்து மேலும் www.ssc.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 25 வரை. 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்க லாம். வருகிற 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நாளை (3-ந்தேதி) அன்று முதல் நேரடியாக நடைபெற உள்ளது.

இப்போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News