உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்

Published On 2023-04-05 08:25 GMT   |   Update On 2023-04-05 08:25 GMT
  • நிதி நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காபேரி புதூரை சேர்ந்தவர் பாண்டி.இவரது மனைவி ராமேஸ்வரி(வயது 25) இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதே நிதி நிறுவனத்தில் சங்கர பாண்டியா புரத்தைச் சேர்ந்த ரவி (35) என்பவரும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்து தனிநபருக்கு ரூ.46ஆயிரம் கடன் வழங்கியது போல் ஆவணம் தயார் செய்து பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ராமேஸ்வரி மற்றும் ரவிக்கு இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரவி, ராமேஸ்வரியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர் பொன் குமார் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி அறிந்த ராமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி மற்றும் ராமேஸ்வரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நிதி நிறுவனத்தில் இருந்து முறைகேடு செய்த பணத்தை செலுத்தி விட வேண்டும் என்றும் ,ரவி அனுப்பிய ஆபாச படத்தை அழித்துவிட வேண்டும் என்றும் உறுதி வாங்கினர்.

இதைத் தொடர்ந்து சம்சிகாபுரம் பகுதியில் உறவினருடன் சென்ற ரமேஸ்வரியை, ரவி வழிமறித்து ரூ.46 ஆயிரம் தர முடியாது என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .

இது குறித்து ராமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தா.ர் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News