உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பனை விதைகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

Published On 2022-10-29 08:11 GMT   |   Update On 2022-10-29 08:11 GMT
  • கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

இதில் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய நீர் இறைப்பானை மாநில த்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2021-22-ம் ஆண்டில் வட்டியில்லா விவசாய கடன் அட்டை பயிர்க்கடன் வழங்கியதில் முதல் 3 இடங்கள் பெற்ற சங்க செயலாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் காட்டுப்பன்றிகளை விரட்டும் நுகர்மருந்துகளை விவசாய பயனாளிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பனை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தோட்டக்க லைத் துறையின் மூலம் பனைவிதைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இதில் கலெக்டர் பேசுகையில், நடப்பு நிதியாண்டின் ரபி பருவத்திற்கு விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்க ளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை பெறும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 84 ஆயிரத்து 399 விவசாயிகளையும் கள ஆய்வு செய்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு 12-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் போது மான அளவில் இருப்பில் உள்ளது.

விவசாய கடன் அட்டைகள் பெற விண்ணப்பித்த 25 ஆயிரத்து 290 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்ப ட்டுள்ளது. வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் விவசாயிகளிடமிருந்து வேளாண்மை தொட ர்பான பொதுவான கோரிக்கைகளுக்கு கருத்துக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News