உள்ளூர் செய்திகள்

விருதுநகருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2023-10-24 08:35 GMT   |   Update On 2023-10-24 08:35 GMT
  • விருதுநகருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
  • 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.

விருதுநகர்

தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (25-ந் தேதி) தேனி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு விருதுநகருக்கு வருகிறார். ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், மறுநாள் (26-ந்தேதி) ராமமூர்த்தி ரோட்டில் நடைபெறும் பிரமாண்ட இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அதனை தொடர்ந்து கல்லூரி சாலையில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க.வை சேர்ந்த 2 ஆயிரம் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மதியம் மருத்துவ கல்லூரி கலைஞரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பின்னர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநதி ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

விருதுநகர் மாவட்டத் திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் சீனிவாசன் எம்.எல்.ஏ., இளைஞரணி நிர்வாகிகள், கட்சியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News