உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு

Published On 2023-09-07 08:14 GMT   |   Update On 2023-09-07 08:14 GMT
  • அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலந்திருப்பது தெரியவந்தது.
  • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் காலையில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் பணிக்கு வந்த சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதற்காக குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர்.

அப்போது தொட்டியில் உள்ள குடிநீரில் ஒருவித துர்நாற்றம் ஏற்பட்டது. சமூக விரோதிகள் குடிநீரில் சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. இதனால் காலை சிற்றுண்டி செய்யும் பணி தாமதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று அரசு விடுமுறை என்பதால் பள்ளி பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் கிராம மக்கள் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். அப்போது மீண்டும் தண்ணீரில் சாணம் கலந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசா ருக்கும், பள்ளி உயரதிகாரி களுக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News