கூடுதல் பள்ளி கட்டிடத்தை கட்டிதர கோரிக்கை
- வத்திராயிருப்பு அருகே மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவ-மாணவிகள் இதனால் கூடுதல் பள்ளி கட்டிடத்தை கட்டிதர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம், வத்தி ராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட கீழக் கோட்டையூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலை ப்பள்ளி கடந்த 2018-ம் ஆண்டு உயர்நிலை ப்பள்ளியாக தரம் உயர்த்தப்ப ட்டது. தற்போது 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் மேல கோட்டையூர், அக்கனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
நடுநிலைப்ப ள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் கூடுதல் பள்ளிக்கட்டிடம் இல்லை. பள்ளியில் உள்ள ஒரு கட்டி டமும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த கட்டிடமும் மூடப்பட்டு விட்ட தாலும் மாணவர்கள் வளாகத்தில் உள்ள மரத்தடி யில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. மழை, வெயில் என்று பாராமல் தரையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கவேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.
ஆதலால் இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் அமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.