உள்ளூர் செய்திகள்

பட்டாசுகள் பறிமுதல்; 2 பேர் கைது

Published On 2023-10-19 12:29 IST   |   Update On 2023-10-19 12:29:00 IST
  • பட்டாசுகள் பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி அருகே மேட்டமலை வாடியூர் ரோட்டில் உள்ள பட்டாசு கடை ஒன்றின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அந்த பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி வி.கே.எஸ்.தெருவை சேர்ந்த விஜயன் (38), ஜெனார்தனன் (42) ஆகியோரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை பகுதியில் வங்கி அருகே தகர செட்டு ஒன்றில் 3 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் வைத்திருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News