உள்ளூர் செய்திகள்

கல்லூரி-பள்ளி மாணவிகள் மாயம்

Published On 2023-09-02 07:16 GMT   |   Update On 2023-09-02 07:16 GMT
  • கல்லூரி-பள்ளி மாணவிகள் மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி லிங்காபுரம் காலனியை சேர்ந்தவர் தங்கசாமி(57). இவரது 18 வயது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு தங்கசாமி மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

கதவை தட்டி பார்த்தபோது உள்ளே இருந்து அவரது மகளும், ஒரு வாலிபரும் வந்தனர். அந்த வாலிபரை பிடித்து தங்கசாமி யார் என விசாரித்துள்ளார். அப்போது பாரதி நகரை சேர்ந்தவன் என கூறிய வாலிபர் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தங்கசாமி, வீட்டின் முன்பு வைத்து மகளை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்குள் சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்தபோது மகள் அங்கு இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை.

இதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தங்கசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முக சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சித்திரன்(57). இவரது 16 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அதிகாலையில் காண வில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபு த்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சித்திரன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News