உள்ளூர் செய்திகள்

கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

கோடைகால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்

Published On 2023-05-16 08:22 GMT   |   Update On 2023-05-16 08:22 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.
  • பயிற்சியின்போது தினசரி சிற்றுண்டி வழங்கப்பட்டது.

விருதுநகர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தி னால் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

இந்த பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளின் உடல் திறன் மற்றும் விளை யாட்டு திறனை மேம்படுத் தும் பொருட்டு தடகளம், கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் வாலிபால் போன்ற விளை யாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் போது தினசரி சிற்றுண்டி வழங்கப் பட்டது. பயிற்சி முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 245 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு, கலெக்டர் ஜெயசீலன் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமர மணிமாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாஹிர் உசேன், ராம்கோ நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News